தம்மம்பட்டியில் சுவர் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

தம்மம்பட்டியில் சுவர் விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார்.

Update: 2024-07-04 11:28 GMT

வழக்கு பதிவு

கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் செல்வராஜ் என்பவரின் வீடு வேலை நடைபெற்று வந்த நிலையில், கொண்டையம்பள்ளி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுவர் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சிலம்பரசன் சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News