கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

புளியங்குடியில் நடந்த கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2024-03-11 07:19 GMT
 புளியங்குடியில் நடந்த கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நேற்று மாலையில் கடையநல்லூரைச் சார்ந்த மைதீன் பிச்சை (53) தனது உறவினரை பார்க்க நடந்து வரும் பொழுது சொக்கம்பட்டி சென்று கொண்டிருந்த எதிர்பாரவிதமாக தடுப்பு சுவரில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து தமுமுக மருத்துவ சேவை அணியினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News