விராலிமலை அருகே கார் மோதி ஒருவர் பலி

விராலிமலை அருகே கார் மோதி ஒருவர் பலியானர்.

Update: 2024-05-29 11:21 GMT

கோப்பு படம் 

விராலிமலை ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சி தேவளியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (48). குண்டூரில் வீடு கட்டி மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று பைக்கில் கீரனுார் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். புதுக்கோட்டைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதி யது.

இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News