விக்கிரவாண்டி அருகே விபத்தில் ஒருவர் பலி - போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அருகே லாரி மோதியதால் ஒருவர் பலி. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 12:08 GMT
விக்கிரவாண்டி அருகே விபத்தில் ஒருவர் பலி - போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 55). தொழிலாளி. இவர் காலை தனது மொபட்டில் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலை முனையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சீனுவாசன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.