நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பம் - கலெக்டர் கிறிஸ்துராஜ்

நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-12 05:50 GMT

ஆட்சியர் கிறிஸ்துராஜ்

நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி கடந்த ஆண்டு நவம்பர் 20-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும்,எவ்விடத்திலிருந்தும்ந நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில அளவை செய்யப்பட்ட தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.மேலும் நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் இணையவழி சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்...

Tags:    

Similar News