பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-15 05:20 GMT

அணைகளில் நீர் திறப்பு 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாபநாசம் அணையில் இருந்து இன்று (ஏப்‌.15) காலை நிலவரப்படி விவசாயத்திற்காக 204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. மணிமுத்தாறு அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



Tags:    

Similar News