குமரியில் மழை பாதிப்பு பகுதிகளில் எதிர்கட்சித் தலைவர் ஆய்வு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

Update: 2023-12-20 05:24 GMT
குமரியில் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பாா்வையிட்டாா். கோவளம் மீனவ கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். தொடா்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அஞ்சுகிராமம் சந்திப்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.    

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சா்கள் என்.தளவாய்சுந்தரம், ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.டி.பச்சைமால், வி.எம்.ராஜலெட்சுமி, அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலா்கள் எஸ்.ஜெஸீம், தாமரை தினேஷ், பேரூா் செயலா்கள் ராஜபாண்டியன், சிவபாலன், மணிகண்டன், எஸ்.எழிலன், தாமரை சுதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News