உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு தொகை வழங்க செய்ய உத்தரவு !!!
உடல் உறுப்பு தானம் வழங்கியவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின், மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-06-01 09:14 GMT
உடல் உறுப்பு தானம் வழங்கியவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின், மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க கோரி தானம் பெறுபவர்களும், வழங்குபவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உடல் உறுப்பு தானம் வழங்குவதில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனை இல்லை என்றால், தானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரிய விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என்றும் அன்பின் அடிப்படையில் தானம் வழங்குவது தொடர்பாக அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.