மழையால் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்!

போளூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

Update: 2024-05-10 06:48 GMT

சேதமடைந்த நெல் மூட்டைகள் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது. போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மூட்டைகள் வரை எடை போடுவதற்கு இடங்கள் உள்ளன. மழையால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெளிப்பகுதியில் உள்ள 4 ஆயிரம் மூட்டைகளும், பால் வார்த்து வென்றானில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,000 மூட்டைகளும் மழையில் நனைந்து நாசமாயின.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
Tags:    

Similar News