கடன் பிரச்சனையால் பஞ்சர் கடைக்காரர் தற்கொலை

தூத்துக்குடி அருகே கடன் பிரச்சனையால் பஞ்சர் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-24 16:19 GMT
கடன் பிரச்சனையால் பஞ்சர் கடைக்காரர் தற்கொலை

தற்கொலை 

  • whatsapp icon

தூத்துக்குடி அருகே உள்ள சாமிநத்தம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பு மகன் கிருஷ்ணகுமார் (50) இவர் டூவீலர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்கவே மனமுடைந்த கிருஷ்ணகுமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News