ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-17 14:58 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வட்டம்,வையாவூர் ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் குடிநீர் விநியோகிப்பாளர் பணி செய்து வருகின்றனர்.. இவர்களுக்கு கடந்த நான்கு மாத காலமாக ஊதியம் வழங்கப்படாததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

இந்நிலையில் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் வையாவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் சங்கத்தின் மதுராந்தகம் வட்ட செயலாளர் வி.திருமலை தலைமையில், காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News