அன்னையர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவி பங்கேற்பு!

திமிரி அருகே நடைபெற்ற அன்னையர் தின விழா கொண்டாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி சுகன்யா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Update: 2024-05-13 02:59 GMT

அன்னையர்களுக்கு பாத பூஜை

திமிரி அருகே காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் உலக செவிலியர் தின விழா, அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் எஸ்.லட்சுமி, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக வரகூர் பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவி டி.சுகன்யா தினகரன், சி.எம்.சி. பொது செவிலியர் நிரஞ்சனா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர்களுக்கு பாத பூஜைகள் செய்து, இனிப்பு வழங்கி, குழந்தைகள் ஒவ்வொருவரும் ஆசி பெற்றனர். திமிரி வட்டார சி.எம்.சி. மருத்துவமனை திட்ட முகாமின் பொது செவிலியர் நிரஞ்சனா தேவியின் சேவையை பாராட்டி பள்ளி கணக்காளர் எஸ்.லட்சுமி சால்வை அணிவித்து, நினைவுப் பரிசை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஏராளமான அன்னையர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News