விழுப்புரத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் !

விழுப்புரத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்ற நிலையில் மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-08 08:32 GMT

சங்க கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நீலமேகன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரங்கநாதன் வரவேற்றார்.

மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மகேஸ்வரன், தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர்செல்வன், தலைமை மகளிரணி செயலாளர் கவுசல்யா, மாநில துணைத்தலைவர் கவிச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக ஊராட்சி செயலாளர்களுக்கு, சிறப்பு நிலை, தேர்வு நிலைக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.ஊராட்சி செயலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இருப்பதுபோல், கவுன்சிலிங் முறையில் தாலுகாவிற்குள் பணி இட மாறுதல் வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களை பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.ஊராட்சி செயலாளர்களின் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News