சிவகாசியில் பங்குனி பொங்கல் தெப்ப திருவிழா !

சிவகாசியில் பங்குனி பொங்கல் தெப்ப திருவிழாவில் நடைபெற்றது.

Update: 2024-04-17 07:05 GMT

திருவிழா

சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் 'தெப்பத் திருவிழா' உற்சாகம். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.

திருவிழா நிறைவு பெற்றதையடுத்து நேற்றிரவு, ஸ்ரீமாரியம்மன் கோவில் எதிரே உள்ள கோவில் தெப்பத்தில் 'தெப்பத் திருவிழா நடைபெற்றது.முன்னதாக ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து, ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினார்.பின்னர், அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News