நாடாளுமன்ற தேர்தல் தொகுதி அலுவலகம் திறப்பு முன்னாள் அமைச்சர் பங்கேற்பு !
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தினை நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 07:04 GMT
அதிமுக
அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தினை நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ராஹா தமிழ்மணி,திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் விஜய சரவணன்,அதிமுக நகரச் செயலாளர் அங்கமுத்து,நகர அவைத் தலைவர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் இரா முருகேசன், எஸ் ஆர் எம் டி சந்திரசேகர், எம். சி மோகன், அணிமுர் மோகன், சக்திவேல்,ராஜன், மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் சுந்தர்ராஜன், மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.