அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிநீரின்றி பயணிகள் அவதி!

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் போதிய குடிநீர் வசதியில்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-05-28 06:22 GMT

அறந்தாங்கி புதுகை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் அறந்தாங்கியும் ஒன்று. இங்கு நகராட்சி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், ரயில் நிலையம், பஸ் நிலையம், பல்வேறு துறை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இதனால் பல்வேறு பணிகள் நிமித்தமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் அறந்தாங்கி பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.ஆனால், பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

வசதியில்லாத ஏழை மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமப்படுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்துதர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News