கூழாங்கற்கள் கடத்தல் - லாரி பறிமுதல், டிரைவர் கைது

திருமயம் அருகே கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

Update: 2024-02-05 02:59 GMT

பறிமுதல் செய்யப்பட்ட லாரி 

திருமயம் அருகே கே.புதுப்பட்டி சப். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கழனி வாசல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பர்மிட் இன்றி கூழாங்கற்கள் ஏற்றிவந்தது தெரியவந்ததது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் நரிமேடு சுரேஷ்(35) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News