புதிய பேருந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் புதிய பேருந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

Update: 2024-06-29 01:33 GMT

குமாரபாளையத்தில் புதிய பேருந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்


 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து திருச்செங்கோட்டிற்கு நெ.8 எனும் நகர பேருந்து 4 எண்ணிக்கை செயல்பட்டு வருகிறது. . வழியில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால், அங்கிருந்து குமாரபாளையம் பகுதிக்கு விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லவும், குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலவும் பெரும்பாலோர் குமாரபாளையம் வருகின்றனர்.

இதனால் மேலும் அதிக பேருந்துகள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே வந்து கொண்டிருந்த நான்கு பேருந்துகளில், ஒரு பேருந்து பழுதான நிலையில் இருந்ததால், அதற்கு பதிலாக புதிய பேருந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News