குப்பைமேடு தீ பற்றி எரிந்து கரும்புகையால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம், காரணைப்புதுச்சேரி பகுதியில் குப்பைமேட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-03 02:41 GMT
குப்பைமேடு தீ பற்றி எரிந்து கரும்புகையால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி காரணைப்புதுச்சேரி பிரதான சாலையில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல்படாத கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காலி மனையில், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் குப்பை கொட்டி சேமிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு சேமித்து வைக்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றாததால், குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, பகுதிவாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. இது குறித்து, சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பகுதிவாசிகள் கலெக்டருக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

அதன் விளைவாக, லோக்சபா தேர்தலுக்கு முன், குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குப்பை தேங்கிய நிலையில், மர்ம நபர்கள் குப்பையில் தீ வைத்து சென்றுள்ளனர். குப்பை மேடு பற்றியெரிந்து, சுற்றிலும் கரும்புகை வெளியேறியது. அப்பகுதிவாசிகள், இது குறித்து மறைமலை நகர் தீயணைப்பு துறை நிலைய மேலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஏழு பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags:    

Similar News