கார் விபத்தில் ஒருவர் பலி

திண்டுக்கல், கரூர் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-03-09 05:14 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்.இவர் நேற்று (மார்ச்.8) கிரியம்பட்டி பகுதியில், திண்டுக்கல், கரூர் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News