கொரடாச்சேரி பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

கொரடாச்சேரி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்

Update: 2024-02-04 16:38 GMT

கோப்பு படம் 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொரடாச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பெட்டி கடையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கொரடாச்சேரி தெற்கு மாங்குடி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகன் பன்னீர் வயது 54 என்பவரை போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.

சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த கொரடாச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வைரமணி மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags:    

Similar News