பழனியில் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம்

பழனியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி நடந்தது.

Update: 2024-06-11 10:55 GMT

மாணவர்களுக்கு பயிற்சி வழங்கல்

பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளை சேர்ந்த 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்கள் என 50 பேர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் தொடர்பான பயிற்சியுடன் கைவேலை, வீட்டு சாதன அழகு கலைப்பொருட்கள், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது. பயிற்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News