மாற்று இடம் வழங்குமாறு கோரிக்கை மனு

குகையநல்லூரில் மாற்று இடம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-23 01:28 GMT

குகையநல்லூரில் மாற்று இடம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநெல்லூர், பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் வசித்து வந்த இடம் நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி மின் இணைப்பை துண்றத்து வீடுகளை காலி செய்ய அரசு தரப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.

இவர்களுக்கு மாற்று இடம் எனக்கூறி புத்தார் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட இடம் எதுவென்பதும் அளந்து தரப்படவில்லை. இந்நிலையில் அவர்கள் வசிக்கும் வீட்டை விட்டு வெளியேற்றினால் எங்கு செல்வது என்று தெரியவில்லை எனவே குகையநல்லூர் கிராமத்திதில் பட்டா வழங்கி தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.

Tags:    

Similar News