கிரிவலப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி கோரி மனு !
பழனி கிரிவலப் பாதையில் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்க கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Update: 2024-03-12 08:33 GMT
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையடிவார கிரிவலப் பாதையில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். உயா்நீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து, கடந்த 8 ஆம் தேதி முதல் கிரி வலப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பழனியை பொருத்தவரை, மாா்கழி, தை ஆகிய இரு மாதங்கள் மட்டுமே கூட்ட நெரிசல் இருக்கும். இதுவரை ஆட்டோ ஓட்டுநா்கள் மூலம் பக்தா்களுக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்பட்டதில்லை. பழனியைச் சோந்த 1000-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதையில் மீண்டும் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.