ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2023-11-27 07:22 GMT

மனு அளிக்க வந்த ஐ என் டி யூ சி அமைப்பினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கட்டுமான அமைப்பு சாரா நல வாரிய அலுவலகத்தில் நிரந்தர அலுவலர் நியமிக்க கோரி ஐ என் டி யு சி தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட அளவிலான கட்டுமானம் அமைப்பு சாரா நல வாரிய அலுவலகம் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் திருமணம், விடுபட்ட விவரங்கள்,  இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதிய அரசாணை மற்றும் உதவி தொகைக்களுக்கான ஒப்படைப்பு வழங்குவதில் நிரந்தர அலுவலர் இல்லாததால் காலதாமதம் ஏற்படுவதால் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி நிரந்தர அலுவலர் நியமனம் செய்து உதவித்தொகைகள் விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ என் டி யு சி தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
Tags:    

Similar News