பாதுகாப்பு வழங்க கோரி சுயேட்சை ஆழ்வார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Update: 2024-04-11 02:35 GMT
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் மனு அளித்தார், அவர் அளித்துள்ள மனதில் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 100% மக்கள் வாக்களிக்க வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் வருவதற்கு இலவச பேருந்து வசதி, ரயில் வசதி, தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பு மது கடைகளை மூட வேண்டும், மேலும் ஏகே 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வசதி வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கழுத்து நிறைய பண மாலை அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News