தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Update: 2024-01-25 11:38 GMT
நாகர்கோவில் புகைப்பட கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது. இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

Tags:    

Similar News