மேட்டுப்பாளையத்தில் சரக்கு ஆட்டோ மோதி போட்டோகிராபர் பலி

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையத்தில் சரக்கு ஆட்டோமொபை போட்டோகிராபர் வெளியானார் வெள்ளகோவில் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை.

Update: 2024-04-26 05:12 GMT

வடிவேல் (வயது 36)

திருப்பூர் மூலனூர் வடுகபட்டி அருகே உள்ள மஞ்சக்காம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் செல்வமணி தம்பதியின் மகன் வடிவேல் (வயது 36). வடிவேல் அந்த பகுதியில் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். இவர் முத்தூரில் ஒரு நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். முத்தூர் வெள்ளகோவில் சாலை மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த வடிவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். வடிவேலுக்கு சுகந்தி 28 என்ற மனைவியும் மிசா என்கிற எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் துறை ஆய்வாளர் ஞானபிரகாசம், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News