அரசு அலுவலகத்தில் முதல்வர் மற்றும் பிரதமர் படங்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மற்றும் பிரதமர் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Update: 2024-03-16 15:22 GMT

அரசு அலுவலகத்தில் முதல்வர் மற்றும் பிரதமர் படங்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் பெயர் பலகை மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெயர் மற்றும் புகைப்படங்கள் பிரதமர் மோடி ஆகியோரின் படங்கள் மறைக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது அதனை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகார் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி இந்த புகார் பெட்டியில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News