குழாய்கள் அமைக்கும் பணி: எம்எல்ஏ., ஆய்வு

திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழாய்கள் அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

Update: 2024-01-02 10:32 GMT
திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநகர் காலனி, இந்திரா நகர்,பகுதியில் சுமார் 750 வீடுகள் உள்ளது, இங்குகடந்த 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த சாக்கடைநீர் தேங்கும் பிரச்சனையை தீர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிக்கு நமக்கு நாமே திட்டத்தில் 36 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி உருவாக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது இந்த பணிகளுக்கு நவீன கருவிகளை கொடுத்த பிஆர்டிநிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், எஸ் பி கே கல்வி நிறுவனங்களின் சேர்மன் பிரபு குமார்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மண்டல இளைஞர் அணி தலைவர் ராயல்செந்தில்,கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News