அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-05-13 15:32 GMT

உறுதிமொழி எடுத்துக்கொண்ட செவிலியர்கள்

மதுரையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12ஆம் தேதி நேற்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒன்றிணைந்து கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் செவிலியர் தினத்தை கொண்டாடினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News