காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர் சமுதாயத்தை அவமானப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-23 03:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா திருவாலங்காடு ஊராட்சி வடாண்யேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் ஒருவர்  மொபைல் வாட்சப் ஸ்டேட்டஸ் இல் வன்னியர் சமூகம் குறித்தும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவமதிக்கும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வன்னியர் சங்கத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும்  உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவாலங்காடு காவல் நிலைய ஆய்வாளர் புகார் மனுவை வழங்கி உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினர் காவல்துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் ராஜகோபால் உறுதி அளித்து அடுத்து காவல் நிலையத்தில் குவிந்த  பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.   இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News