பி எம் எஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் பி எம் எஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-29 08:22 GMT

நாகர்கோவிலில் பி எம் எஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது நேரடி தேர்வு மூலம் நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறையில் ஓட்டுனர், நடத்துனர் தேர்வு செய்யும் முறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (பி எம் எஸ்) சார்பில்  நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் சதீஷ்குமார், கிளை நிர்வாகிகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News