பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ வழக்கு

சேலம் மாவட்டம்,காரியாபட்டி பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-23 02:09 GMT

வழக்குபதிவு

சேலம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நேரு. இவர் வீட்டில் தனியாக இருந்த 19 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் அந்த பெண்ணுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அந்த பெண்ணின் தாய்க்கு தெரியவந்ததும் அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நேரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News