இளம் பெண் மாயம் - போலீசார் விசாரணை

கள்ளகுறிச்சி மாவட்டம், சோமநாதபுரத்தில் மாயமான இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-01 08:47 GMT

சிறுமி மாயம் 

கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேவகுமார் மகள் காவியா, 20; இவர், சிறுவங்கூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்று வருகிறார். கடந்த 28ம் தேதி கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News