வெள்ளிச்சந்தை அருகே வாழை தோப்பில் ஆண் பிணம் போலீசார் விசாரணை 

வெள்ளிச்சந்தை அருகே வாழை தோப்பில் ஆண் பிணம்-போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-10 02:30 GMT

ஆண் சடலம்  

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே உள்ள பரப்புவிளை என்ற இடத்தை  சேர்ந்த ஒருவரின் வாழைத் தோப்பு அந்த பகுதியில் உள்ளது. அந்த தோப்பில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் சிபு குமார் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது.  ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிபு குமார் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சென்று பிணத்தை பார்வையிட்டனர்.  இறந்த கிடந்தவரின் இடது கையில் ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் போடப்பட்ட தழும்பு இருந்தது. ஏதோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் அங்கிருந்து வாழை தோப்புக்கு வந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News