Police-Public Relationship விழிப்புணர்வு ஏற்படுத்திய வடமதுரை போலீசார்

செங்குறிச்சி கம்பிளியம்பட்டி பொதுமக்களுக்கு Police-Public Relationship ஏற்படுத்திய வடமதுரை போலீசார்

Update: 2024-10-06 11:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் வேடசந்தூர் டிஎஸ்பி இலக்கியா அவர்களின் உத்தரவின்படி, வடமதுரை செங்குறிச்சி கம்பிளியம்பட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தி Police-Public Relationship ஏற்படுத்திய வடமதுரை போலீசார். திண்டுக்கல் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் சித்திக் மற்றும் வேலுமணி, ஊர் பஞ்சாயத்து தலைவர் வீராசாமி தலைமையில் செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும், குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதன் அவசியம் குறித்தும் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் பிரச்சனையே இல்லாத நல்ல ஊர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மற்றும் CCTV ஊரில் பொருத்தவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News