போலீசார் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் போலீசார், என்.சி.சி மாணவர்கள், தீயணைப்பு துறையினரின் குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-25 03:25 GMT
போலீசார் ஒத்திகை
குமரி மாவட்டத்தில் நடைபெறும் குடியரசு தின ஒத்திகை , போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர் படை யினர் கலந்து கொண்டனர். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.விழா நடைபெறும் மைதானத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா விளையாட்டு அரங்க வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடியரசு தினத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News