குரங்கிற்கு தண்ணீர் கொடுத்த காவலர் - வைரல் வீடியோ !
சிவகங்கையில் தாகத்தில் இருந்த குரங்கிற்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Update: 2024-04-04 07:23 GMT
சிவகங்கை மாவட்ட முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் காட்டுக்குள் வாழும் குரங்குகள் மற்றும் பறவைகள் மனிதர்கள் வாழும் இடங்களை தேடி வருகின்றன. சிவகங்கை ஆட்சியரக மைதானப் பகுதியில் குரங்கு ஒன்று தண்ணீர் இன்றி தாகத்துடன் அப்பகுதியில் வலம் வந்துள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் தேவேந்திரன் என்பவர் தனது பாட்டிலில் இருந்த தண்ணீரை குரங்கிற்கு கொடுத்துள்ளார். அந்த குரங்கு கருணையுடன் அந்தக் காவலரை பார்த்துக் கொண்டே தண்ணீரை குடித்துள்ளது . தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.