டூ வீலர் மீது லோடு ஆட்டோ உரசிய விபத்தில் காவலர் காயம்

கிருஷ்ணன்கோவில் மதுரை சாலையில் டூ வீலர் மீது லோடு ஆட்டோ உரசிய விபத்தில் காவலர் காயமடைந்தார்.

Update: 2024-04-23 01:58 GMT
 கிருஷ்ணன்கோவில் மதுரை சாலையில் டூ வீலர் மீது லோடு ஆட்டோ உரசிய விபத்தில் காவலர் காயமடைந்தார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவை சார்ந்தவர் ரகு வயது 29 இவர் திருநெல்வேலி உவரி போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார் இவர் மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணிக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணன்கோவில் மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஸ்ரீவில்லிபுத்துறை சார்ந்த முருக சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்ற லோடு ஆட்டோ எந்தவித சிக்னலும் செய்யாமல் அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் வலதுபுறத்தில் திரும்பியதாகவும் அந்த லோடு ஆட்டோ மீது மோதி விடாமல் இருப்பதற்காக ரகு தனது இருசக்கர வாகனத்தை திருப்ப முயற்சி செய்த பொழுது லோடு ஆட்டோ மீது உரசியது இதில் ரகு காயமடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூடிய கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
Tags:    

Similar News