கடையநல்லூர் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-03-02 02:08 GMT
கடையநல்லூர் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு நடைபெற்றது
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராமப் பகுதிகளில் வரும் ஞாயிறு போலியோ சொட்டு மருந்து முகாம் தென்காசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆலோசனையின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில் கடம்பன் குளம், சேர்ந்தமரம், கடையாலுருட்டி, திருமலாபுரம், குலசேகரமங்கலம் ரெங்கநாதபுரம், பெரியசாமிபுரம், ஊத்தான்குளம், புவலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் போலியோ சொட்டு நடைபெறும் உள்ள இடங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News