போலியோ சொட்டு மருந்து முகாம்

தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-04 07:30 GMT

தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் போலியோ இல்லாத குழந்தைகளை உருவாக்க தமிழக அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் மற்றும் ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். அப்போது நகர துணை செயலாளர் வி. கமலக்கண்ணன், சுகாதார அலுவலர் மணிகண்டன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News