திமுகவின் ஆடம்பர விழாவே திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி.

திமுகவின் ஆடம்பர விழாவே திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி மீண்டும் சேலத்தின் விவசாயி ஒட்டு மொத்த மக்களின் ஆதரவோடு ஆட்சியில் அமர வழி வகுக்கும் என திருப்பூரில் சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்தார்.

Update: 2024-01-22 01:29 GMT

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரவி மரியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகரும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும் , எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தபோது சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு இன்ப நிதி வந்திருப்பதன் மூலம் குடும்ப அரசியலால் திமுக அழிவை சந்திக்க போகும் எனவும் , மக்களின் துன்பம் தெரியாமல் உதயநிதியை விளையாட்டுத்துறை அமைச்சராகி வேடிக்கை பார்த்த ஸ்டாலின் தற்போது இன்ப நிதியை அழைத்து வந்திருப்பதாகவும், அதுவே அவர்களுக்கு துன்ப நிதியாய் அமைந்து சேலத்தில் நடைபெறுகின்ற ஆடம்பர விழா மூலம் திமுக ஆட்சி அழிவை சந்தித்து மீண்டும் சேலத்தின் விவசாயி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவோடு ஆட்சியில் அமர திமுகவின் சேலம் மாநாடு வழிவகுக்கும் என பேட்டியளித்தார்.

Tags:    

Similar News