இல்லம் தேடி கல்வி சார்பில் பொங்கல் விழா

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி, விடியல் ஆரம்பம்  சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-15 14:01 GMT

பொங்கல் கொண்டாட்டம் 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கலைமகள் வீதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையம், விடியல் ஆரம்பம்  சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் பலர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் வழங்கினார். இதில் தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, நிர்வாகிகள் பஞ்சாலை சண்முகம், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News