காஞ்சிபுரத்தில் ஜி கே வாசன் தலைமையில் பொங்கல் விழா

காஞ்சிபுரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-17 06:44 GMT

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொங்கல் திருவிழா மாவட்ட தலைவர் புருஷோத்தமன் மற்றும் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.இதில் புதுப் பானையில் பொங்கலுக்கு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கபடி போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போல போட்டி என பல்வேறு வகை போட்டிகள் பொதுமக்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நடைபெற்றது. இதற்கு முன்பாக பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தலைவர் ஜி கே வாசன் மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டார்.

மேலும் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அரிசி புடவை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News