ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்டம், பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-12 10:43 GMT
பொங்கல் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட, பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமத்துவப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி வேளாண்மை குழு பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்தனர்.

முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது. உலகெங்கும் தமிழர்களால் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தையும், சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு செய்திகளையும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களிடம் அறிவுறுத்தியதன் பேரில் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். சாதி சமய வேறுபாடுகள் களைந்து மாணவர்களாய் ஒன்று சேர்ந்து பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News