பொங்கல் பரிசு சிறப்பு அலுவலர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசு சார்ப்பில் வழங்கப்படும்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை சிறப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-01-12 07:18 GMT
குமரி கலெக்டர், சிறப்பு அலுவலர் பார்வையிட்டனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில்  அனைத்து நியாயவிலைக்கடைகளின் வாயிலாக தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறப்பு அலுவலரும்,  பத்திரபதிவு துறை மற்றும் வணிக வரித்துறை செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பா.ஜோதி நிர்மலா சாமி, ராஜாக்கமங்கலம்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளியாவிளை, ஈத்தாமொழி டிப்கோ மற்றும் அமுதம் நியாயவிலைக்கடைகள் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிககளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை பார்வையிட்டார்.   உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உட்பட பலர் கலந்து  கொண்டார்கள்.
Tags:    

Similar News