அஞ்சலக சிறப்பு முகாம்

செந்துறை வட்டார வள மையத்தில் அஞ்சல்துறை சார்பிலான சிறப்பு முகாம் நாளையும், அதற்கு மறுநாளும் நடக்கிறது.

Update: 2023-10-29 06:47 GMT

செந்துறை அஞ்சலகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டார வள மையத்தில் அஞ்சல்துறை சார்பிலான சிறப்பு முகாம் அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி கிராமஅஞ்சல் ஆயுள் காப்பீடு, மகளிர் மேன்மை சிறப்பு திட்டம் உள்ளிட்ட ஒருங்கிணைக்கபட்ட அஞ்சலக சேவைகள் மற்றும் ஆதாரில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட ஆதார் சேவைகள் செய்து தரப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே செந்துறை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு திருச்சிராபள்ளி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News