பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக பெரம்பலூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-27 05:05 GMT

மின் நிறுத்தம்

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் ஜனவரி 30 ம் தேதி காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை மதனகோபாலபுரம்,துறைமங்கலம்மின் நகர், நான்கு ரோடு பாலக்கரை எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கேகே நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திரா நகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என பெரம்பலூர் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் முத்தமிழ் செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News