சேலத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

சேலத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-02-04 16:11 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் நகர கோட்டம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (6-ந்தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால்,

சேலம் தாதுபாய்குட்டை, கடை வீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, முதல்அக்ரஹாரம் ஒருபகுதி, மேட்டுத்தெரு, செரி ரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக் கோவில், டவுன் ரெயில் நிலையம், 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு,

லைன்ரோடு, வள்ளுவர்நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளைரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News